Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினை ஸ்டன்னாக்கிய துறைமுகம் காஜா! திமுக இஃப்தார் விழாவில் திடீரென தேம்பி தேம்பி அழுகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான துறைமுகம் காஜா, ஸ்டாலின் முன்னிலையில் திடீரென தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Thuraimugam Kaja suddenly burst into tears in the presence of Stalin

இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்த துறைமுகம் காஜா, பழைய நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டி தாம் பேசும் போது கண்ணீர் விட்டு கதறினார்.

அதாவது ஒரு முறை கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான தஞ்சை சுல்தான் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த போது கருணாநிதி காரில் ஏறி புறப்பட தயாராகிவிட்டதாகவும், அந்த நேரம் பார்த்து சுல்தான் வந்ததால் அவரை தன்னால் கருணாநிதியை சந்திக்க வைக்க முடியவில்லை எனவும் கூறினார்.

இருப்பினும் கருப்பு பூனை படையிடம் இந்தியில் பேசி அண்ணன் சுல்தானை சந்திக்க விடுங்கள் என தாம் கூறியும் அவர்கள் அதை பொருட்படுத்ததால் கருணாநிதியின் கான்வாய் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக கூறினார் துறைமுகம் காஜா.

மறுநாள் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி, தஞ்சை சுல்தான் வரும் தகவலை ஏன் முன் கூட்டியே என்னிடம் சொல்லவில்லை என கடிந்துகொண்டதுடன், நாளையிலிருந்து உன்னை அறிவாலயம் பக்கமே பார்க்கக் கூடாது என விரட்டிவிட்டதாக கூறினார்.

Thuraimugam Kaja suddenly burst into tears in the presence of Stalin

இதையடுத்து நேராக தாம் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு சென்று நடந்த விவரத்தைச் சொல்லி, தலைவர் என்னை வரக் கூடாது என்கிறார் என்ன செய்ய எனக் கேட்டதாகவும், அட போப்பா அவர் கொஞ்ச நேரத்தில் அதை மறந்துவிடுவார் வழக்கம் போல் வருமாறு தன்னிடம் பேராசிரியர் அன்பழகன் கூறியதாகவும் கூறினார்.

அன்பழகன் பேச்சைக் கேட்டு அடுத்த நாள் அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற போது, காரில் இருந்த இறங்கிய கருணாநிதி, இவன் எதுக்கு இங்கு நிற்கிறான், இவனை தான் வரக்கூடாது என்று சொன்னனே என தன்னிடம் கடிந்ததால் அறிவாலயம் பின்புறம் உள்ள நூலகத்துக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

Thuraimugam Kaja suddenly burst into tears in the presence of Stalin

மீண்டும் அடுத்த நாள் மாலை அண்ணா அறிவாலயம் சென்ற தாம் முகப்பு வாசலில் நிற்காமல் பின்புறம் உள்ள நூலகம் பக்கம் நின்றதாக தெரிவித்தார். அப்போது எங்கய்யா அவன் என தன்னைப் பற்றி சண்முகநாதனிடம் கருணாநிதி கேட்டதோடு வரச் சொல்லுமாறும் கூறியதைக் கேட்ட தாம் அழுதுவிட்டதாக கூறிக்கொண்டே மேடையில் தேம்பி தேம்பி அழுதார் துறைமுகம் காஜா.

ஸ்டாலினை ஸ்டன்னாக்கும் வகையில் சின்னப் பிள்ளையை போல் துறைமுகம் காஜா அழுவதை பார்த்த பலரும் ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டனர்.

தன்னை பொறுத்தவரை அண்ணா அறிவாலயம் தான் தனக்கு எல்லாம் என்றும் பக்ரீத், ரம்ஜான் போன்ற நாட்களில் கூட அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சென்றால் தான் தனக்கு தூக்கம் வரும் எனக் கூறி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் துறைமுகம் காஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+