தீபாவளிக்கு முதல் நாள் பஸ்ஸில் ஊருக்கு போக திட்டமா.. அப்ப இந்த விஷயம் உங்களுக்குத்தான்!
Recommended Video

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான டிக்கெட் முன் பதிவு அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் மற்றும் இரண்டு தனியார் இணையதளங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை என்றதும் கோயம்பேடு பேருந்துநிலையத்திலும், சென்னையில் ரயில்வே ஸ்டேசன்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து புக்கிங் செய்வார்கள். இப்போது அப்படி அல்ல.. எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு நடந்து வருகிறது. ஆனால் கூட்டம் தான் சுத்தமாக இல்லை. எல்லோரும் ஆன்லைனிலேயே புக்கிங் செய்து வருகிறார்கள்.

டிக்கெட் புக்கிங்
வரும் அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து நடைமுறைகளின் படி அறுபது நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் அக்டோபர் 25-ஆம் தேதி பயணம் செய்பவர்களுக்கு முன் பதிவு நேற்று நடந்தது .

நாளை மறுநாள் ரிட்டன் புக்கிங்
அக்டோபர் 26 ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது. இதேபோல் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்புவதற்கான முன்பதிவு நாளை மற்றும் நாளை மறு நாளில் இருந்து துவங்குகிறது.

2 தனியார் இணையதளங்கள்
அரசு பேருந்துக்கான முன்பதிவு tnstc.in என்ற அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் மற்றும் இரு தனியார் இணையதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

ஆம்னி பேருந்து புக்கிங்
பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் புக்கிங் என்பது ஒரு மாதத்திற்கு முன்பு என்ற விதிப்படி செய்யப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் தான் தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications