திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலைதான்.. கைகளை கட்டியது ஏன்? - அருண் IPS விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரியவந்துள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை, அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

Tirumala milk manager Naveen s Death Was Suicide says Chennai Police Commissioner Arun

கமிஷனர் அருண் பேட்டி

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், "நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது. சிலர் தூக்கிட்டுக் கொள்ளும்போது காப்பாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதுபோல பல இடங்களில் நடந்துள்ளது.

மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறு​வனத்​தின் சட்ட மேலா​ளர் சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில், தங்​கள் நிறுவன நிதிப்​பிரி​வின் கரு​வூல மேலா​ள​ரான நவீன் பொல்லினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்​த​தாக புகார் அளித்​தார்.

நான் தான் லீவு கொடுத்தேன்

அது தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் வங்கி கணக்கு பட்​டியலை சமர்ப்​பிக்க அறி​வுறுத்​தினோம். அந்தப் புகார் மனு விசாரணை நிலை​யிலேயே உள்​ளது. ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீன் மரணம் நிகழ்ந்த அன்று பாண்டியராஜனுக்கு நான் தான் விடுப்பு கொடுத்து அனுப்பினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேனேஜர் தற்கொலை

திரு​மலா பால் நிறு​வனத்​தில் ரூ.40 கோடி கையாடல் செய்த விவ​காரத்​தில் சிக்​கிய மேலா​ளர் நவீன் நேற்று முன்தினம் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொல்லினேனி (37). திரு​மண​மாகி குடும்​பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திருமலா பால் நிறுவனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலாளராகப் பணியாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு, செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.

போலீஸ் விசாரணை?

இதுதொடர்​பாக அந்​த நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை, நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, 'பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்' என போலீ​சாரிடம் நவீன் கெஞ்சி கேட்​டு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு, அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடலமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து புழல் போலீசார் சம்பவ இடம் சென்​று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், போலீ​சாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்​டன​ரா? என்​பது குறித்து போலீ​சார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சந்தேகம்

நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன எனத் தெரியவந்தது. கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் தான் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+