தன் முகத்திரையை தானே கிழித்த அமித்ஷா.. வயிற்றெரிச்சல்.. விசிக தலைவர் திருமாவளவன் சுளீர்
சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?. எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார் என்று திருமாவளவன கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் சாசனம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவையிலும் விவாதம் நடைபெற்றது. மக்களவை விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவை விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளித்தனர். அப்போது அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

அமித்ஷா பேசும்போது, "தற்போதைய அரசியலில் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர். அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும். இருப்பினும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும்." என்றார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டணங்கள் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமித்ஷாவை மன்னிப்பு கேட்க சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெளிநடப்பு செய்வது, தீர்மானம் கொண்டு வருவது என்று தங்களின் கண்டனத்தால் நாடாளுமன்றத்தையே முடக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், "மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், "புரட்சியாளர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தான் அவமதித்தது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதைத்தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என்று பிரதமர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அமித்ஷாவுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என்று தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications