பால் வார்ப்பாரா பன்னீர்செல்வம்? வெசனத்தோடு காத்திருக்கும் விவசாயிகள்.! இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் கரும்பு நெல்லுக்கு அதிக தொகை, விவசாயிகள் உயிரிழந்தால் இழப்பீடு, கூட்டுறவு வங்கிகளில் கடன் உயர்வு ஆகிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக மகளிர் நலன், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. மேலும், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 15 நாள் விடுப்பு சரண், எதிர்பாரா விபத்தில் உயரிழந்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2025 2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். காலை ஒன்பதரை மணிக்கு அவர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது பட்ஜெட் உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதற்கு பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து 17ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் எனவும், 21ஆம் தேதி வரை மானியக் கோரிக்கை விவாதமும் துறை சார்ந்த அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும்.
தொடர்ந்து 24-ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த நிலையில் இந்த வேளாண் துறை பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெல் கொள்முதல் செய்யும் போது குவிண்டாலுக்கு 3500, கரும்புக்கு 4400 ரூபாயும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் எதிர்பாராத விதமாக விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களுக்கு காப்பீட்டு திட்டம், 58 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாத உதவித் தொகை, காவிரி கொள்ளிடம் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கூட்டுறவு வங்கி கடனை அதிகரிப்பது, கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வது, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவது மற்றும் மேலும் பல புதிய அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications