உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா? அதிமுக எம்.எல்.ஏவுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ ஆர்பி உதயகுமார் இன்று சட்டசபையில் பேசிய நிலையில், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, "உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் நாகை மாலிக், பிரின்ஸ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்ட பின்பும் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் மட்டும் அவையில் இருந்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏழை எளிய பெண்கள் விடுபட்டுள்ளனர். வசதிபடைத்த குடும்பத் தலைவிகள் ரூ.1000 பெற்றுள்ளனர். முதலமைச்சர் ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என அறிவித்தது உண்மை, ஆனால் அது 28 மாதங்கள் கழித்து. ஆனால் முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து தேர்தல் அறிக்கை தந்த போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்குவோம் என கூறி இருந்தார் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "ஒண்ணே ஒண்ணு சொல்றேன். உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா? அப்பாவு வீட்டு அம்மாவுக்கு 1000 ரூபாய் வேணுமா? இதையெல்லாம் மனசாட்சியை தொட்டு, சாதி, மதம், இனம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் குறைபாடுகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் சுட்டிக்காட்ட வேண்டும், சாமானிய மக்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க உதவ வேண்டும்.." என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், "முதலமைச்சர் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். மீண்டும் மேல் முறையீடு செய்ய முன்வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் சர்வர் வேலை செய்யததால் மக்கள் எங்கே சென்று விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை. நிபந்தனைகளை தளர்த்தி குடும்பத்தலைவிகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்" எனக் கூறினார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யவில்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் ஆதாரத்தை கொண்டு வந்து கொடுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் வந்து தருவதற்கு அரசியல் பார்க்கிறீர்கள் என்றால், அங்கிருக்கும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications