இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், எந்தவொரு தகவல்களும் விடுபட கூடாது என்றும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இ-மெயில் முகவரி கொடுக்காவிட்டால் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. வரும் திங்கள்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்நிலையில் வேட்பாளர் ஒருவர் தனது வேட்புமனுவுடன் இணைக்கும் உறுதி மொழி பத்திரத்தில் சொத்து - கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், தண்டனை விவரங்கள், கல்வித் தகுதி, பான் கார்டு, வருமான வரி விவரம், தொடர்பு விவரங்கள், சமூக ஊடகக் கணக்குகள் என அனைத்தையும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
அதற்கிடையில் இ-மெயில் முகவரி கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படி தெரிவிக்காமல் போனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேட்புமனுவில் குற்றவிவரங்களை மறைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும்.அதனால் தான் அனைத்து விவரங்களையும் வேட்பு மனுவில் வேட்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சுற்றறிக்கையில் கூறுகையில், "கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக சமர்ப்பிப்பது சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரத்தில், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வேட்பாளர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
உறுதிமொழிப் பத்திரத்தில் ஏதேனும் ஒரு பகுதி நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் வழங்க வேண்டும். அந்த நோட்டீசைப் பெற்றவுடன், அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரும், முழுமையான விவரங்களுடன் கூடிய உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், வேட்புமனு பரிசீலனையின் போது அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்














Click it and Unblock the Notifications