7 அடுக்கு கட்டிடம்.. மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாடுதுறையில் ரூ.114 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தையும் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்த நிலையில், புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். அப்ப்போது அமைச்சர் எவ வேலு முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.

TN CM MK Stalin Visits Mayiladuthurai for Inauguration of New Collector office today

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலினை திமுகவினர் வழியனுப்பி வைத்தனர். நேற்று இரவு 8.45 மணியளவில் சீர்காழிக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் தான் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திருவெண்காட்டில் இருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான மக்கள் நல திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் 700 படுக்கைகளுடன் ரூ 254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை, மயிலாடுதுறையில் 3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் 4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்கிறார். இதன்பின்னர் இன்று மதியம் 1 மணிக்கு திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை வந்தடைகிறார். முதல்வர் முக ஸ்டாலின் வருகையை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+