மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்!
சென்னை: திமுக - சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத சூழலில், சிபிஎம் கட்சி தரப்பில் மார்ச் 23ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடக்கவிருப்பதால், அதற்குள் ஒரு முடிவு எடுக்குமாறு நேரடியாகவே திமுகவிடம் கூறி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுக, கொமதேக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கடந்த முறையை விட கூடுதலாக 3 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அத்தனை கட்சிகளுக்கும் 1 முதல் 2 இடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால், அனைவரும் தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்து வருகிறது. இதனால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து அத்தனை கட்சிகளும் பின் வாங்கிவிட்டன.
ஆனால் எந்த நிலையிலும் தொகுதிகளை குறைத்து கொள்ள முடியாது என்பதில் சிபிஎம் கட்சி கறாராக இருக்கிறது. சிபிஐ போல் 5 கட்சிகள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சிபிஎம் நிர்வாகிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இறங்கி வரும் மனநிலையில் இல்லை. இப்போது வந்த தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளா என்று கொந்தளித்து வருகிறார்.
ஏற்கனவே திமுக - சிபிஎம் இடையில் 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட சூழலில், பெ.சண்முகம் அதிருப்தியில் இருக்கிறார். ஏனென்றால் 5 தொகுதிகள் என்பதில் இருந்து திமுக இறங்கி வர மறுக்கிறது. ஆனால் சிபிஎம் தரப்பில் 6 தொகுதிகளுக்கு 1 குறைந்தால் கூட எங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என்று சிபிஎம் கட்சி தரப்பில் கூறிவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் சிபிஎம் கட்சி தரப்பில் திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டை முடிக்க அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை திமுக கறாராக இருந்தால், நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம் என்றும் கூறி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications