சசிகலா, ஓபிஎஸ், கருணாஸ்.. முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய ஸ்டாலினின் மைக்ரோ பிளான்!
சென்னை: தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்கலத்தோர் மற்றும் நாடார் சமூக மக்களின் ஆதரவை பெற திமுக தலைமை மைக்ரோ லெவல் பிளாவில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2016ல் ஜெயலலிதா பின்பற்றிய அதே பாணியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்ற தொடங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டும் 58 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் கணிசமாக வெல்லும் கட்சியே பெரும்பாலும் ஆட்சியை அமைக்க முடியும். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு கொடுத்த 11.5 சதவிகித இடஒதுக்கீடு அதிமுகவுக்கு பின்னடைவாக மாறியது. அதேபோல் அதிமுக மீது கவுண்டர் சாயம் பூசப்பட்டது.

அதற்கேற்ப கொங்கு மண்டல நிர்வாகிகளே இப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த முறை எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக ஆகியோருடன் டிடிவி தினகரனின் அமமுக, 23 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தடுத்தது. இதனால் இம்முறை பாஜக மூலமாக டிடிவி தினகரனை தங்களின் கூட்டணிக்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துவிட்டார்.
ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக ஓபிஎஸ் திடீரென திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். முக்குலத்தோர் மக்களின் அடையாளமாக ஓபிஎஸ் இருந்தாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இருந்தாலும் திமுகவுக்குள் ஓபிஎஸ் கொண்டு வரப்பட வேறு சில காரணங்கள் இருக்கின்றன.
அதாவது முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி என்ற பிம்பத்தை திமுக கட்டமைக்க உள்ளது. 2026 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் களமாட போவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் 2016ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பாக கருணாஸ் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
கருணாஸ் அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரப்பட்டதற்கு, முக்குலத்தோர் சமூக பின்னணியும் காரணம். அதே பாணியை முதல்வர் ஸ்டாலின் இம்முறை பின்பற்றி இருக்கிறார். இந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கருணாஸ் போட்டியிட இருக்கிறார். அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக களமாடுவார் என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம் சசிகலாவும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த தயாராகிவிட்டார். அதற்கேற்ப முக்குலத்தோர் சமூக சங்கங்கள், அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைந் நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ டிடிவி தினகரன் மற்றும் பாஜகவை மட்டுமே நம்பி இருக்கிறார். இதனால் திமுகவின் மைக்ரோ லெவன் பிளான் பலன் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்!












Click it and Unblock the Notifications