தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!
சென்னை: விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளின் பிடிவாதம் காரணமாக, தேமுதிகவிடம் தொகுதிகளை குறைத்து கொள்ள திமுக மேலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் தேமுதிகவுக்கு 9 சீட்கள் கொடுக்க திமுக முடிவு செய்திருந்த சூழலில், இம்முறை 7க்கு குறைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுது உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இருப்பினும் திமுகவின் முக்கிய கூட்டணியான விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

தேமுதிகவை பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் கூட்டணிக்கு வருவதற்கு முன்பாகவே தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை இறுதி செய்தார்.
ஆனால் திமுக மேலிடம் நினைத்ததை போல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் செல்லவில்லை. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்துள்ளன. சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தேமுதிகவிடம் மீண்டும் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதலில் தேமுதிகவுக்கு 9 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க திமுக முன் வந்திருந்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் பிடிவாதம் காரணமாகவே தேமுதிகவுடன் திமுக மீண்டும் பேசி வருகிறது. இதன் காரணமாக தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, அங்கு பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது வந்த பிரேமலதா விஜயகாந்த் பெரியளவில் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு பின்னணியில் திமுகவின் இந்த தொகுதி குறைப்பு பேச்சுவார்த்தை தான் என்று சொல்லப்படுகிறது. இதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த பிரச்சனைகளை திமுக சரி செய்யுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications