தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை.. சென்னை வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நேற்றைய தினம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

நாளை அதிகாலை
பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றும் நாளையும் வடதமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை
மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீர் நிலைகள்
அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரத்தில் கனமழை பெய்யும். மாநிலத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பாசன கால்வாய்களில் 26 சதவீதம் நிரம்பிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அதாவது 75 சதவீதம் அளவுக்கு கால்வாய்கள் நிரம்பிவிட்டன. 11 கால்வாய்கள் நீரை தேக்க வழியின்றி கிடக்கின்றன.
Recommended Video

வெள்ள அபாய எச்சரிக்கை
சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. நாளை வரை தமிழகத்தில் கனமழை தொடரும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications