பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.10,000லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு 10 கல்வி ஆண்டுகள் கடந்து விட்டன.

தற்போது 12 ஆயிரத்து, 483 பேர் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications