Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. அமைச்சர் சொன்ன 17 நாளில் வந்தது அரசாணை.. தமிழக அரசு மாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், 17 நாட்களில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 tn government increases age limit to join as teacher

ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியர்களை நேரடி நிர்ணயம் செய்வதற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொது​ப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அரசாணையை பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "04.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம்.

அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஆகும் கனவில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+