பகீர் தகவலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.. வளமெல்லாம் கொள்ளை! 4 ஆண்டில் 16 லட்சம் டண் தாது மணல் கடத்தல்
சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 16 லட்சம் டண் தாது மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்படுவது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கும், சேமித்து வைப்பதற்காக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 1.5 கோடி டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்டு இருந்த தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. விசாரணையின் போது, தாது மணல் சேகரிக்கப்பட்டிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு சட்ட விரோதமாக தாது மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்து உள்ளது. மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த அறிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வி.வி மினரல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications