ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின்போது அவையில் அமைதியாக இருந்த எம்எல்ஏக்களை, ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், கை தட்டுங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சொன்னவுடன் அங்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.
Recommended Video
பட்ஜெட் கூட்டத்தொடர், சட்டசபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அப்போது அவர் தமிழில் வணக்கம் என கூறி உரையை தொடங்கினார்.

கொள்கைகள்
அவர் தொடர்கையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது தமிழக அரசு. எந்த பாரபட்சமும் இன்றி, அனைவருக்குமான அரசாக செயல்படும். மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுயாட்சி
மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவோம். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்.

உரிமை
மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு கடுமையாக எதிர்க்கும் என்றார். பின்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவு, தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

எம்எல்ஏ
அப்போது அவையில் இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் இதை கவனித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டுங்கள் என சொல்லி அவையை கலகலப்பாக்கினார்.

அவை
இதனையடுத்து ஆளுநரின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் எம்எல்ஏக்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பொதுவாக அவையில் கட்சி பேதமின்றி அனைவரையும் சிரிக்க வைப்பவர் துரைமுருகன். இன்று ஆளுநரும் அவையை கலகலப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications