மிகக்குறைந்த விலையில் நாப்கின்கள்? ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு தகவல்
சென்னை: மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏழை பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தமிழ்நாட்டில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன. அங்கு மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் மானிய விலையில் நாப்கின்கள் விற்பனை செய்யப்படுவது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அத்துடன், அன்றைய தினம் கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக தனியார் மருந்தகங்களில் ஒரு மாத்திரை விலை ரூபாய் 30 என்றால் இங்கு ரூபாய் 10 தான்.
லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மக்கள் மருந்தகங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் பட்சத்தில் நாள்தோறும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் உள்ளிட்டோர் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications