உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு.. பாஜக 2 மேயர் பதவி கேட்கிறது.. போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்!
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்கிறது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்கிறது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம்.

மழை பெய்கிறது
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் கன மழை பெய்தால், அதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு குறித்தும், புயல் சின்னம் குறித்தும் உடனுக்குடன் அறிவிக்கப்படும். மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும்.

2 மேயர் பதவி
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது. இரண்டு முக்கிய மாநகரங்களில் மேயர் பதவியை பாஜக கேட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது.

முடிவு
கட்சியினர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இதுபற்றி இறுதி முடிவை கட்சி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும்.தேர்தல் அறிவித்த பின் பெரும்பாலும் எங்கள் முடிவை நாங்கள் தெரிவிப்போம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கேள்வி
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் ரெடியாகி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பாஜக எந்த இடங்களில் மேயர் பொறுப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு இதனால் அதிகமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications