Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார்கள்-எடப்பாடி பழனிச்சாமி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், கோயமுத்தூர் மாநகராட்சியில், கலவரம் ஏற்பட ரவுடிகள் இறக்கப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனால் கோயமுத்தூருக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டிருந்தார். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்று இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார்.

TN Local body election: Minister Senthil Balaji is appointed to createe violence in Coimbatore, says AIADMK leader Edappadi Palanisamy

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

குண்டர்களையும்,ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற அதிமுக‌ கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதுடன்,
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் தொடர்ந்து துணை ராணுவத்தை கேட்டுவரும் நிலையில், தமிழகத்துக்கு துணை ராணுவம் தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தில் நாளைய தேர்தலுக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கோவையில் தங்கியிருந்த வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை நடக்கும் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+