ஊரக உள்ளாட்சி தேர்தல்.. நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன,
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் .30-ந் தேதி 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இப்பகுதிகளில் நேற்று இறுதி கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது.
2 கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.