சீன ஆப்களுக்கு தடை-புதிய செயலிகளை உருவாக்க தமிழக ஐடி நிறுவனங்களுக்கு அமைச்சர் வேலுமணி அப்பீல்
சென்னை: சீனாவின் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய செயலிகளை தமிழக ஐடி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக், ஹலோ போன்ற சமூக வலைதளங்கள் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் செயல்பட மத்திய அரசு முழுமையாக தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலிகள் காலாவதியாகிவிட்டது.

பல மாதங்கள் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்திய கோடிக்கணக்கான இந்தியர்கள், இப்போது அதே போன்று பயன்படுத்துவதற்கு எளிமையான சமூக வலைதள செயலிகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தற்சார்பு பொருளாதார கொள்கையை உயர்த்தும் வகையில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
புதிய சமூக வலைதள செயலிகளுக்கான தேவை உருவாகியுள்ள இந்த காலகட்டத்தில், தகவல் தொழில் நுட்ப துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பதிவில், 59 சீன செயலிகள் மீதான மத்திய அரசின் தடை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய மற்றும் புத்தாக்க செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு சரியான வாய்ப்பு என்று கருதுகிறேன். கோவை உள்ளிட்ட தொழில்நுட்ப நகரங்களில் உள்ள தொழில் முனைவோர் இதை பயன்படுத்தி தொழில் நுட்ப வேலைகளை பெரிய அளவில் உருவாக்கிட வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பயணிக்க காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையினரின் ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்திய சமூக வலைதள விரும்பிகள் மீண்டும் அயல்நாட்டு சமூக வலைதளங்களை நாடாமல் இருக்க, உள்நாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தொழில் வளத்தை பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விடுத்துள்ள கோரிக்கை தமிழக தொழில் முனைவோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications