ரேசன் அட்டைதாரர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்! ரூ.4886 கோடி திட்டத்தில் தமிழக அரசின் அதிரடி முடிவு
சென்னை: ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கேழ்வரகு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படியொரு முடிவு அரசு எடுத்துள்ளது.. இதற்கான முதற்கட்ட கொள்முதல் பணிகள் தற்போது தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானிய வகைகளைச் சேர்த்துள்ள நிலையில், தமிழக அரசும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கேழ்வரகு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான கேழ்வரகினை தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் பணிகளைத் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் சார்பில் மேற்கொண்டு வருகிறது.

கேழ்வரகு கொள்முதல்
கடந்த 2024 - 25ம் ஆண்டு கொள்முதல் சீசனில் மொத்தம் 3,950 டன் கேழ்வரகு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நடப்பு கொள்முதல் சீசனானது கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற்றது.
இதற்கிடையில், கொள்முதல் பணிகளுக்கான கால அவகாசத்தைத் தமிழக அரசு கோரியிருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்று, வரும் ஆகஸ்ட் மாதம் வரை கேழ்வரகு கொள்முதல் பணிகளை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அறிவிப்பு
இதன் மூலம் விவசாயிகள் ஆகஸ்ட் மாதம் வரை தங்களது விளைபொருட்களை அரசு கொள்முதல் நிலையங்களில் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு டன் கேழ்வரகுக்கு 48,860 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கொள்முதல் சீசனைப் பொறுத்தவரை, மொத்தம் 6,000 டன் கேழ்வரகைக் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, இம்மாதம் 24ம் தேதி வரையிலான நிலவரப்படி, சுமார் 2,005 விவசாயிகளிடம் இருந்து 4,282 டன் கேழ்வரகு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ராகி - தமிழக விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா?
மீதமுள்ள இலக்கை எட்டும் வகையில் கொள்முதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்குக் கேழ்வரகு வழங்க அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பொது விநியோகத் திட்டத்தில் ஒரு மாற்றமாக அமையும். இதற்கான கொள்முதல் இலக்குகள் மற்றும் கால நீட்டிப்பு ஆகியவை விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது வரை நடைபெற்றுள்ள கொள்முதல் புள்ளிவிவரங்கள், நிர்ணயிக்கப்பட்ட 6,000 டன் இலக்கில் பெரும்பகுதி எட்டப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்படும் இந்தக் கேழ்வரகு, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் சேமிக்கப்பட்டு வருகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை நேரடியாக விவசாயிகளுக்குக் கிடைப்பதையும், கொள்முதல் செயல்முறைகள் முறையாக நடைபெறுவதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்முதல் காலத்தைப் பயன்படுத்தி, இலக்கினை முழுமையாக அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள் வாயிலாக இந்தத் தானியங்கள் பெறப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications