Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதிவுத்துறை குட்நியூஸ் தருதா? வில்லங்க சான்றிதழ், சொத்து பத்திரங்கள்.. விரைவில் வருகிறதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புயல் புரட்டி எடுத்த நிலையில், பொதுமக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். இந்நிலையில், தமிழக பத்திரப்பதிவு துறை, முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னையை உலுக்கி எடுத்துவிட்டு போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

TN Registration Department to issue Property Deed, Encumbrance Certificate copies, due to Chennai Flood, say sources

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்.. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்..

படகு போக்குவரத்து: இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஏகப்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.. இதனால், அவர்களால் வெளியே வரமுடியாத நிலைமை உள்ளது.. சென்னையின் புறநகர்ப்பகுதிகளின் பெரும்பாலான தெருக்களில், படகு போக்குவரத்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

வழக்கமாக தாழ்வான பகுதிகளில்தான் மழைநீர் சூழ்ந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடு பகுதிகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள்: அதிலும் தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டதால், அவர்கள் மொட்டை மாடிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் பாழாகி உள்ளன. இதில், சொத்து பத்திரங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்துள்ளன.. இதனால், கடுமையாக அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "தமிழகத்தில், 2015ல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, சில இடங்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன... இதனால், வீடுகளில் மக்கள் வைத்திருந்த சொத்து பத்திரங்களும் பாழாகிவிட்டன.. அந்த நேரத்தில், வில்லங்க சான்றிதழ் மற்றும் அடையாள சான்றுகள் அடிப்படையில், சான்றிடப்பட்ட பிரதி ஆவணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

ஆவணங்கள்: இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த முகாம்கள் வாயிலாக, மாற்று பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

இதையடுத்து, விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, சொத்து பத்திரங்களின் நகல்கள், வில்லங்க சான்றிதழ், அடையாள சான்றிதழ்கள் போன்றவற்றின் பிரதி ஆவணங்கள் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+