தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்- 69 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா உறுதியானது.

TN reports 4,549 Positives for Coronavirus

இந்த இன்று ஒரேநாளில் 4,549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிகை 1,56,369 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,157 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 1712 இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் தற்போது 15038 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் இன்று 267 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் மதுரையில் 679 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மதுரையில் தற்போதைய நிலையில் 2929 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+