இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.. மாநில கல்வி கொள்கையில் அறிவிப்பு!
சென்னை: 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் என 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இதில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்றும், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என என்றும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நியைில் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம் வகுப்பு தடையற்ற கல்வி என்பதை உறுதி செய்யப்படும். ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து தேர்ச்சியை முடிவு செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததற்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு முதலே 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications