சேப்பாக்கம் மைதானத்தில் ”கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்” பெயரிடப்பட்டது ஏன்? பொன்முடி மகன் கொடுத்த பதில்!
கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் பெயர்க் காரணம் குறித்து அசோக் சிகாமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கலைஞர் கருணாநிதி பெயரை ஸ்டாண்ட் திறக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே கேப்டன் தோனி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி பெயர் ஏன்?
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிக்கு முன்னாள் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்சிஏ கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி கூறுகையில், சேப்பாக்கம் தொகுதியில் நீண்ட காலமாக எம்எல்ஏ-வாக இருந்தவர் கருணாநிதி தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 95 சதவிகித போட்டிகளை கருணாநிதி நேரில் உட்கார்ந்து பார்த்துள்ளார்.

கருணாநிதி கொடுத்த நன்கொடை
இந்த மைதானம் கட்டும் போது கருணாநிதி ரூ.15 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளார். அதேபோல் அண்ணா பெவிலியன் என்று ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ஸ்டாண்ட் என்பதால், கலைஞர் கருணாநிதி பெயரை வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதுமட்டுமல்லாமல் ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் தான் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லி, ஒப்புதல் பெற்றுக் கொண்டோம் என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அதேபோல் எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்க பரிசீலனை செய்ததாகவும், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மைதானத்தின் பெயரை மாற்றக் கூடாது என்று அறிவுறுத்தியதாகவும் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ஸ்டாண்ட்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் திறக்கப்பட்டால் 38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணா பெவிலியன்
இதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார். இப்போது கருணாநிதி பெயரிலான ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications