சில நாட்களில் பொது தேர்வு.. மின்வாரியம் அதிரடி உத்தரவு! தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்
தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை: பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோடைக் காலம் வந்துவிட்டாலே மின்சார பயன்பாடு அதிகரித்துவிடும்.. கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால், குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படும்.@

பொதுத்தேர்வு
இதே மார்ச் ஏப்ரல் காலகட்டத்தில் தான் பொதுத்தேர்வுகளும் நடைபெறும். அதன்படி தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை மின்வாரியம் கடந்த நவ. மாதமே அறிவித்துவிட்டது.

அட்டவணை
அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. +1 மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. +1,+2 மாணவர்களுக்குத் தேர்வு முடிந்த பிறகு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

மின்வாரியம்
பொதுத்தேர்வு தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதனிடையே பொதுத்தேர்வு குறித்தும் தேர்வு மையம் குறித்தும் மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தடையில்லா மின்சாரம்
அதன்படி, பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு எழுதும் சமயத்தில் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்க தேவையான முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான ஊழியர்களைத் தயார் நிலையில் வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications