Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுதும் நடக்கிறது.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனிக்க விஷயங்கள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. இதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் செய்திருக்கிறார்கள்.. தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

tnpsc group 4 exam tamil nadu government 4

இன்று தேர்வு

அந்தவகையில், இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. ஆண்கள், 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர், 117 மூன்றாம் பாலினத்தவர்கள் என 13,89,738 பேர் எழுத உள்ள நிலையில், 13,89,738 பேர் விண்ணப்பித்த நிலையில், 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 3,935 பணி இடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம், 314 தேர்வு மையங்களில் இந்த குரூப் 4 தேர்வினை இன்று நடத்துகிறது.

விண்ணப்பங்கள்

இதற்காக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு இன்று சனிக்கிழமை நடக்கிறது.. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

குருப் 4 பணிக்கான தேர்வில் பகுதி 1 ல் தமிழ் மொழித் திறனை அறிவதற்கான தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும், பகுதி 2 ல் பொது அறிவு பிரிவில் 75 கேள்விகளும், திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு கண்காணிப்பாளர்கள்

தேர்வு கண்காணிப்பாளர்களாக 4922 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94,848 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் 9 மணிக்குள்ளாக தேர்வு வளாகத்திற்கு வரவேண்டும். ஹால் டிக்கெட்கெட்டுடன், ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அத்துடன் அவர்களால் எப்போதுமே தேர்வும் எழுத முடியாது.

ஆள்மாறாட்டம்

ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார் என்பதெல்லாம் அடிப்படை விதியாகும்.

நேற்று திடீரென வினாத்தாள் கசிந்துவிட்டதாக செய்திகள் பரவின.. ஆனால், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்திருந்தார். அதில், வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை. வினாத்தாள்கள் பஸ்களில் எடுத்து செல்லும்போது போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+