குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுதும் நடக்கிறது.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனிக்க விஷயங்கள் இதுதான்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. இதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் செய்திருக்கிறார்கள்.. தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.
தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இன்று தேர்வு
அந்தவகையில், இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. ஆண்கள், 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர், 117 மூன்றாம் பாலினத்தவர்கள் என 13,89,738 பேர் எழுத உள்ள நிலையில், 13,89,738 பேர் விண்ணப்பித்த நிலையில், 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 3,935 பணி இடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம், 314 தேர்வு மையங்களில் இந்த குரூப் 4 தேர்வினை இன்று நடத்துகிறது.
விண்ணப்பங்கள்
இதற்காக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு இன்று சனிக்கிழமை நடக்கிறது.. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
குருப் 4 பணிக்கான தேர்வில் பகுதி 1 ல் தமிழ் மொழித் திறனை அறிவதற்கான தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும், பகுதி 2 ல் பொது அறிவு பிரிவில் 75 கேள்விகளும், திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு கண்காணிப்பாளர்கள்
தேர்வு கண்காணிப்பாளர்களாக 4922 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94,848 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் 9 மணிக்குள்ளாக தேர்வு வளாகத்திற்கு வரவேண்டும். ஹால் டிக்கெட்கெட்டுடன், ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அத்துடன் அவர்களால் எப்போதுமே தேர்வும் எழுத முடியாது.
ஆள்மாறாட்டம்
ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார் என்பதெல்லாம் அடிப்படை விதியாகும்.
நேற்று திடீரென வினாத்தாள் கசிந்துவிட்டதாக செய்திகள் பரவின.. ஆனால், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்திருந்தார். அதில், வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை. வினாத்தாள்கள் பஸ்களில் எடுத்து செல்லும்போது போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications