டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வுகள்.. கட் ஆப் மார்க் எவ்வளவாக இருக்கும்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு நேற்று மாநிலம் முழுக்க சுமுகமாக நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு க்ரூப் 4 காலியிடங்களுக்கு கட் ஆப் மார் எதுவாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

க்ரூப் 4 காலியிடங்கள்: க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கட் ஆப் மார்க் எவ்வளவு: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல எம்பிசி பிரிவில் ஆண்களுக்கு 143-146, பெண்களுக்கு 144-147, பட்டியலினத்தவர் பிரிவில் ஆண்களுக்கு 137-141, பெண்களுக்கு 139-142, பட்டியலினத்தவர் அருந்ததியினர் பிரிவில் ஆண்களுக்கு 133-137, பெண்களுக்கு 135-138, பழங்குடியினர் பிரிவில் ஆண்களுக்கு 132-135, பெண்களுக்கு 133-136 கட் ஆப் மார்க் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை.. கடந்த காலங்களில் நடந்த தேர்வுகள் அடிப்படையில் இந்த முறை கட் ஆப் எதுவாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் கணித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்தே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட் ஆப் மார்க் விவரம் தரப்பட்டுள்ளது.
கட் ஆப் எப்படி தீர்மானிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆஃப் மார்க்குகள் பல்வேறு காரணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.. இதில் முக்கியமானது எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்பதாகும். மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர் என்பது கட் ஆஃப் மார்க்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக பேர் விண்ணப்பித்தால் போட்டி காரணமாக கட் ஆஃப் மார்க் அதிகரிக்கலாம்.
அடுத்து காலியிடங்கள்.. எத்தனை காலியிடங்கள் இருக்கிறது என்பது கட் ஆப் மார்க்கை முடிவு செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே கட் ஆப் மார்க் முடிவு செய்யப்படும்.
எப்படி பார்க்கலாம்: ஏற்கனவே கூறப்பட்டது போல இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை. அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க்கை இன்னும் சில காலத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்படும். கட் ஆப் விவரம் வெளியான பிறகு.. டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள TNPSC Group 4 category-wise cutoff என்ற லிங்கை கிளிக் செய்தால் கட் ஆப் விவரங்களை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications