டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வுகள்.. கட் ஆப் மார்க் எவ்வளவாக இருக்கும்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு நேற்று மாநிலம் முழுக்க சுமுகமாக நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு க்ரூப் 4 காலியிடங்களுக்கு கட் ஆப் மார் எதுவாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

க்ரூப் 4 காலியிடங்கள்: க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கட் ஆப் மார்க் எவ்வளவு: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல எம்பிசி பிரிவில் ஆண்களுக்கு 143-146, பெண்களுக்கு 144-147, பட்டியலினத்தவர் பிரிவில் ஆண்களுக்கு 137-141, பெண்களுக்கு 139-142, பட்டியலினத்தவர் அருந்ததியினர் பிரிவில் ஆண்களுக்கு 133-137, பெண்களுக்கு 135-138, பழங்குடியினர் பிரிவில் ஆண்களுக்கு 132-135, பெண்களுக்கு 133-136 கட் ஆப் மார்க் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை.. கடந்த காலங்களில் நடந்த தேர்வுகள் அடிப்படையில் இந்த முறை கட் ஆப் எதுவாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் கணித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்தே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட் ஆப் மார்க் விவரம் தரப்பட்டுள்ளது.
கட் ஆப் எப்படி தீர்மானிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆஃப் மார்க்குகள் பல்வேறு காரணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.. இதில் முக்கியமானது எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்பதாகும். மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர் என்பது கட் ஆஃப் மார்க்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக பேர் விண்ணப்பித்தால் போட்டி காரணமாக கட் ஆஃப் மார்க் அதிகரிக்கலாம்.
அடுத்து காலியிடங்கள்.. எத்தனை காலியிடங்கள் இருக்கிறது என்பது கட் ஆப் மார்க்கை முடிவு செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே கட் ஆப் மார்க் முடிவு செய்யப்படும்.
எப்படி பார்க்கலாம்: ஏற்கனவே கூறப்பட்டது போல இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை. அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க்கை இன்னும் சில காலத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்படும். கட் ஆப் விவரம் வெளியான பிறகு.. டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள TNPSC Group 4 category-wise cutoff என்ற லிங்கை கிளிக் செய்தால் கட் ஆப் விவரங்களை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications