தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா...4 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Today corona affected counting in Tamilnadu

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,23,518 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,40,360 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும், திருவள்ளூரில் 29 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கடலூரில் 25 பேருக்கும், ஈரோட்டில் 22 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஒற்றை இலக்க எண்களிலேயே காணப்படுகிறது. பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டங்களாக இருந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+