தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: எவை செயல்படும்.. எவை செயல்படாது.. விவரம்
சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மருந்தகங்களை தவிர இன்று எந்தவிதமான அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளை திறப்பதற்கும் அனுமதி கிடையாது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதலுவதும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதன்படி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இன்று பால் கடைகள் மற்றும் மருத்தகங்கள் மட்டும் இன்று திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது, பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிக சில பெட்ரோல் பங்குகள் செயல்படும். டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது.
இன்று எந்தவிதமான அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறப்பதற்கும் அனுமதி கிடையாது. சாலைகளில் மக்கள் தேவையின்றி சுற்றினால் போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் வீடுகளுக்கு உள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications