சுட்டெரிக்கும் சூரியன்..அனலை தணிக்க பெய்யும் மழை..4 நாட்களுக்கு தூள்..ஜில் அறிவிப்பு
சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று முதல் தென் மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 32 டிகிரி வெப்பம் சுட்டெரித்தது. கோவையில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. விருதுநகரில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தென் மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் அறிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 10 ஆம் தேதி வரைக்கும் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 11.03.2023 அன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
12ஆம் தேதியன்று அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிககளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications