நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு !
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆய்வு
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஆய்வு செய்தார்.

5000 போலீசார் பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். சென்னையில் உள்ள 3 வாக்கும் எண்ணும் மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மக்களுக்கு பிரச்சனை
மற்ற பகுதிகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், மக்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தயாராக உள்ளோம்
ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள்
இதனிடையே வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications