நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு !
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆய்வு
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஆய்வு செய்தார்.

5000 போலீசார் பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். சென்னையில் உள்ள 3 வாக்கும் எண்ணும் மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மக்களுக்கு பிரச்சனை
மற்ற பகுதிகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், மக்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தயாராக உள்ளோம்
ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள்
இதனிடையே வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications