திடீரென உயரும் கொரோனா கேஸ்கள்.. இன்று 514 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் ஒருவர் பரிதாபமாக பலி! பகீர்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில மாதங்களாகக் குறைந்து நிலையில், இப்போது திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்பட்ட பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தே வந்தது. இதனால் மாநிலத்தில் அப்போது அமலில் இருந்து பல கட்டுப்பாடுகள் வரிசையாக நீக்கப்பட்டன.
கொரோனா வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் பல நாட்களுக்கு மாநிலத்தில் தினசரி பாதிப்பு 50க்கும் குறைவாகவே இருந்தது.

கொரோனா பாதிப்பு: இதனிடையே கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதிய வகை ஓமிக்ரான் திரிபு காரணமாகவே இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், முந்தைய வகைகளைக் காட்டிலும் இப்போது பரவும் ஓமிக்ரான் பாதிப்பு வீரியம் குறைந்ததாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டிய நிலையில், இப்போது அதைக் காட்டிலும் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5866 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இருவர் உட்பட 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 36,02,215ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னை: அதிகபட்சமாகச் சென்னையில் 138 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எந்தவொரு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. கோவையில் 55 பேருக்கும் திருவள்ளூரில் 27 பேருக்கும் செங்கல்பட்டில் 26 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இப்போது சராசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 8.4ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 11.8%ஆக உள்ளது. இது தவிர திருவள்ளூர் (11%), செங்கல்பட்டு (10.9) சென்னை (10.4) கோவை (10.8) சேலம் (10.5) பாசிட்டிவ் விகிதம் 10ஐ தாண்டியுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்: மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 3048ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 3195ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல ஒரே நாளில் 366 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,60,964ஆக உயர்ந்துள்ளது.
சில காலமாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. நேற்று திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 38,056 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications