Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஜெ., வீட்லயே சாணியை கரைச்சு ஊற்றியவன்.. கொதித்த கு.க.செல்வம்.. பின்வாங்காத குஷ்பூ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

தேர்தல் வந்தாலே கூட்டணி மாற்றம், உட்கட்சி பூசல், நட்பு முறிவு, துரோகம் என்று கமர்ஷியல் அம்சங்களை நாம் காண முடியும்.

நேற்று காங்கிரஸ் கட்சியில் அரங்கேறிய கோஷ்டி பூசலை தமிழ்நாடே பார்த்தது. டெல்லி கூட நொந்துகொண்டது. இப்போது பாஜகவும் இப்படியொரு சிக்கலான சூழலை சந்தித்துள்ளது.

 நிபந்தனை

நிபந்தனை

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்து, பின் திமுகவில் ஐக்கியமான கு.க.செல்வம், கருணாநிதிக்கு விசுவாசமாக செயல்பட்டு, பின்னர் பாஜகவில் சங்கமித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் இவர் தான். பாஜகவில் இணையும் போதே, ஆயிரம் விளக்கில் மீண்டும் சீட் வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் இணைந்தார்.

 அண்ணன் தான் எம்.எல்.ஏ

அண்ணன் தான் எம்.எல்.ஏ

அதிமுகவுடனான கூட்டணியை மீண்டும் பாஜக கன்டினியூ செய்ய, கண்டிப்பாக தனக்கு சீட் கிடைக்கும் என்றே அவர் எண்ணினார். அதற்கேற்றாற் போல், ஆயிரம் விளக்கு தொகுதியை அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கியிருந்தது. இதனால், சீட் கன்ஃபார்ம்.. அண்ணன் தான் மீண்டும் எம்.எல்.ஏ. அவரது ஆதரவாளர்கள் வேலை செய்வதில் மும்முரமாகினர்.

 நட்சத்திர அந்தஸ்து

நட்சத்திர அந்தஸ்து

இந்நிலையில், காங்கிரஸில் இருந்து பாஜகவில் ஐக்கியமான நடிகை குஷ்பூவும், அதே ஆயிரம் விளக்கு தொகுதியை கேட்பதால், கட்சிக்குள் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. குஷ்பூ நட்சத்திர அந்தஸ்து கொண்ட கேண்டிடேட். கு.க.செல்வமோ சிட்டிங் எம்.எல்.ஏ. தொகுதியில் செல்வாக்கு உடையவர். தவிர, கட்சியில் இணையும் போதே, ஆயிரம் விளக்கு தான் வேண்டும் என்று ஒப்பந்தம் போடாத குறையாக கேட்டிருந்தார்.

 ஜெ., வீட்டில்

ஜெ., வீட்டில்

இப்போது குஷ்புவும் ஆயிரம் விளக்கு தொகுதி வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாராம். இதனால் டென்ஷனான கு.க.செல்வம் தரப்பு, 'நாம் யார் என்று தெரியாமல் விளையாடுகிறார்களா? போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டிலேயே சாணியைக் கரைத்து ஊற்றியவன் நான்' என்று பொரிந்து தள்ளியதாக கூறப்படுகிறது.

 ஜானகி அட்வைஸ்

ஜானகி அட்வைஸ்

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜா., அணி, ஜே., அணி என்று கட்சியில் பிளவு ஏற்பட, அப்போது ஜா., அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியுடன் இணைந்து கு.க.செல்வம் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சாணியைக் கரைத்து ஊற்றும் போராட்டத்தை நடத்தினார். இதன் பிறகு, ஜெயலலிதா கடைசி வரை அவரை கட்சிப் பக்கமே சேர்க்கவில்லை என்பதும், அதன் பிறகு ஜானகி அட்வைஸ் பேரில் அவர் திமுகவில் இணைந்ததும் வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+