பொங்கல் பண்டிகை: தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் 1 மணிநேரத்தில் முடிந்தன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன.

பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாட்டம் களைகட்ட இருக்கிறது.

Train Tickets Booking to open today for Pongal Festival Holidays

பொங்கல் பண்டிகைகள் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் ஜனவரி 12-ந் தேதி வெள்ளிக்கிழமையே வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் செல்வர். டிக்கெட் முன்பதிவுகளை வீட்டில் இருந்தபடியே https://www.irctc.co.in/nget/இணையதளம் அல்லது டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களில் பதிவு செய்யலாம்.

இதன்படி இன்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11-ந் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்; நாளை முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

பொங்கல் பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. ஆனால் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அதாவது காலை 9 மணிகே தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவுகள் முடிவடைந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+