நைட் ஷிப்ட் முடிந்து வந்த நபர்..போனை பிடுங்கி ஜிபேவில் ரூ50,000 பறித்த திருநங்கைகள்..சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் உள்ள பிரதான சாலையில், நைட் ஷிப்ட் பணி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50, 500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு தனியாக செல்பவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. லிப்ட் கேட்பது போல வாகனத்தை மறிப்பது... வாகன ஓட்டிகள் இரக்கப்பட்டு வாகனத்தை நிறுத்தி கும்பலாக வந்து தாக்குதல் நடத்தி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது போன்ற குற்ற செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

போலீசார் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி இத்தகைய செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரதான சாலையில், இளைஞர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50,500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நைட் ஷிப்ட் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்து இருக்கிறார். பள்ளிக்கரணை சாலையில் ராமமூர்த்தி சென்ற போது அங்கு வந்த திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனால், அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய திருநங்கைகள் அவரது கூகுள் பேயில் இருந்து 50 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமமூர்த்தியிடம் பணம் பறித்த திருநங்கைகளை தேடி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் பள்ளிக்கரணை சாலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐடி நிறுவனங்களும் பல்வேறு கம்பெனிகளும் உள்ள அப்பகுதியில் தினமும் பலரும் பயணிக்கும் முக்கிய சாலைகளில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த வழிப்பறி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, போலீசார் குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதோடு.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications