Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் ஷிப்ட் முடிந்து வந்த நபர்..போனை பிடுங்கி ஜிபேவில் ரூ50,000 பறித்த திருநங்கைகள்..சென்னையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள பிரதான சாலையில், நைட் ஷிப்ட் பணி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50, 500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு தனியாக செல்பவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. லிப்ட் கேட்பது போல வாகனத்தை மறிப்பது... வாகன ஓட்டிகள் இரக்கப்பட்டு வாகனத்தை நிறுத்தி கும்பலாக வந்து தாக்குதல் நடத்தி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது போன்ற குற்ற செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

Transgenders extorted 50,000 from a Chennai person through Google Pay: Police investigation

போலீசார் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி இத்தகைய செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரதான சாலையில், இளைஞர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50,500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நைட் ஷிப்ட் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்து இருக்கிறார். பள்ளிக்கரணை சாலையில் ராமமூர்த்தி சென்ற போது அங்கு வந்த திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனால், அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய திருநங்கைகள் அவரது கூகுள் பேயில் இருந்து 50 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமமூர்த்தியிடம் பணம் பறித்த திருநங்கைகளை தேடி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் பள்ளிக்கரணை சாலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐடி நிறுவனங்களும் பல்வேறு கம்பெனிகளும் உள்ள அப்பகுதியில் தினமும் பலரும் பயணிக்கும் முக்கிய சாலைகளில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த வழிப்பறி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, போலீசார் குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதோடு.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+