பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்... போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!
சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பள்ளி மாணவர்கள் தங்களது பழைய பஸ் பாஸ் மூலமே அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலன்பெறுவார்கள் என்றும் பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அரசு சலுகை
பள்ளிக்கு சென்று கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அரசு சார்பில் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை, இலவச சைக்கிள், நோட்டு புத்தகங்கள், என அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கினாலும் அவற்றில் பிரதானமானது அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயணம். அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1997-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது.

இலவச பாஸ்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் மாணவர்கள் அரசின் இலவச பஸ் பாஸ் மூலம் பயன்பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பாடம் படித்து வந்த மாணவர்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக பள்ளிக்குச் செல்லவுள்ளனர்.

ஸ்மார்ட் கார்டு
இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அதுவரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. முன்பு காகித அட்டையில் வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் இப்போது ஸ்மார்டு கார்டு வடிவில் கொடுக்கப்படுகிறது.

சுற்றறிக்கை
இதனிடையே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்டு நடத்துநர்கள் கடிந்துகொள்ளாத வகையில், இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications