தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்கிற விஷமக்குரல்களை ஆரம்பத்திலேயே அடக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்கிற விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

TTV Dhinakaran urges to take action on Kongu Nadu supporters

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து தனி கொங்கு நாடு மாநிலம் அமைக்க வேண்டும் என்கிறது பா.ஜ.க. இந்த கோரிக்கையை மக்கள் எழுப்பாத நிலையில் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்துக்காக பேசுகிறது என்பது அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.

TTV Dhinakaran urges to take action on Kongu Nadu supporters

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu-வை பிரிக்க முடியுமா? Kongu Naadu உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்கா ?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+