அதிகார துஷ்பிரயோகம்.. அத்துமீறி தாக்குதல்.. கள்ள ஓட்டு போட முயற்சி.. டிடிவி தினகரன் பரபர அறிக்கை
சென்னை: கள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிடிவி தினகரன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடும் முயற்சிகளும் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் சிலர் கள்ள ஓட்டுகளைப் போட முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோளிங்கர் நெமிலி பேரூராட்சி ஓட்டுப் போட வந்த பா.ம.க.வினரை அமமுக வாக்குச்சாவடி முகவர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணெதிரே கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபற்றி அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாக மவுனம் காத்து வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு அமமுக வேட்பாளருடன் வந்த கார்கள் மீதும் பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தியதியுள்ளனர். இதைத் தடுக்கவும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தைத் தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications