தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
சென்னை: சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு முடிவடைந்துவிட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இதற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறது. இந்த மாத இறுதியில் இல்லை அடுத்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த பரபரப்பான கட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சில முன்னாள் அதிமுக உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து இதில் விவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இதில் இவர்கள் பேசி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்த கூட்டத்தில் இந்த மூன்று விஷயங்கள் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து இருக்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications