ஸ்லீப்பர் செல் யார்.. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளியே வருவார்கள்.. டிடிவி தினகரன் பரபரப்பு!
Recommended Video
சென்னை: அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும் என்றும் திமுகவுக்கு சென்று செந்தில்பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் எந்தவித கூட்டணியையும் வைத்து கொள்ளாமல் தில்லாக போட்டியிட்டார். இவர் போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளை பிரித்தார்.
இந்த நிலையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அமமுக 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இது தினகரன் கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது.

அமமுக
இதுகுறித்து சென்னை அடையாறில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் அமமுகவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

பூஜ்யம்
வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும். 300 வாக்கு சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்யம் காட்டியுள்ளது.

பதில்
எங்கள் முகவர்கள் அளித்த வாக்குகள் எங்கே. ஓட்டு பதிவாகாத விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு கூட செல்ல முடியாது. தேர்தல் ஆணையம் உரிய பதிலை சொல்ல வேண்டும்.

செந்தில் பாலாஜி
ஒரு வாக்குச் சாவடியிலும் அமமுக முகவரின் வாக்குக் கூடவா போகாமல் இருக்கும். திமுகவுக்கு சென்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம்.

ஸ்லீப்பர் செல்
10 பேர் விலகியதால் அமமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஸ்லீப்பர் செல் யாரென்பது குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications