துருக்கி,சிரியா நிலநடுக்கம்..சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள்..அரசு அறிவிப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு துருக்கியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிலநடுக்கத்தால் முற்றிலும் சிதைந்து போயுள்ளது துருக்கி நாடு. அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக அரசு வெளிநாடு வாழ் அமைச்சகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் உதவி தேவைப்படும் தமிழர்கள் 044 28525648 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அங்கு உள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் கடந்த 3 நாட்களாக மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் சோகத்திற்கு இடையேயும் கட்டிட குவியல்களில் இருந்து பல உயிர்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பச்சிளம் குழந்தைகள் உள்பட பல சிறுவர்களும், சிறுமியர்களும் எந்த வித சேதமும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் கிடைத்துக்கொண்டிருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 40 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். கடும் பனிப்பொழிவையும் தாண்டி மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக அரசு வெளிநாடு வாழ் அமைச்சகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவ அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் துருக்கி மற்றும் சிரியாவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் 044- 28525648, 044 - 28515288 வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications