துருக்கி மட்டமான வேலை.. மிஸ்சாகியிருந்தாலும், நேட்டோ நாடுகள் கோபம் இந்தியா பக்கம் திரும்பியிருக்கும்
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நிலவிய காலகட்டத்தில், துருக்கி கடற்படையின் TCG Büyükada கப்பல் கராச்சி துறைமுகத்தில் வந்து சேர்ந்தது ஒரு முக்கியமான புவிசார் அரசியல் நிகழ்வாக அமைந்தது. இந்த சம்பவம் நேட்டோ விதிமுறைகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
துருக்கி கடற்படையின் Ada-class ASW corvettes வகையைச் சேர்ந்த TCG Büyükada கப்பல் மே 7 வரை கராச்சி துறைமுகத்தில் தங்கியிருந்தது. இந்த கப்பல் ஓமான் மற்றும் மலேசியா துறைமுகங்களை கடந்த பிறகு கராச்சிக்கு வந்தது. துருக்கி அதிகாரிகள் இதை ஒரு "நல்லநோக்குப் பயணம்" என்று குறிப்பிட்டனர்.

பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இந்த வருகையை இரு நாடுகளுக்கிடையேயான கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகக் கூறினர். இரு நாடுகளும் சமீபத்தில் 'அததுர்க்-XIII' என்ற இணைந்த ராணுவ பயிற்சியில் பங்கேற்றுள்ளன. 2022ல் பாகிஸ்தான் துருக்கியுடன் ஒப்பந்தம் செய்து, 4 MİLGEM கவரெட்டுகளை பாகிஸ்தான் கடற்படைக்கு தயாரிக்க உள்ளது.
நேட்டோ விதிமுறை முக்கியத்துவம்
நேட்டோ (NATO) என்பது வடஅட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பாகும், இதில் உறுப்பினர் நாடுகள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு உறுதிமொழி அளிக்கின்றன. ஒரு நேட்டோ நாடு மீது தாக்குதல் நடந்தால், மற்ற நாடுகள் அதற்கு எதிராக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டு பாதுகாப்பு
நேட்டோவின் மிக முக்கியமான விதிமுறை Article 5 ஆகும். இது "ஒருவர் மீதான தாக்குதல் அனைவர் மீதான தாக்குதல்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விதிமுறையின்படி, ஒரு நேட்டோ உறுப்பினர் நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடந்தால், அது அனைத்து நேட்டோ நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். நேட்டா நாடுகள் என்றால் ஏதோ ஒன்று இரண்டு இல்லை. மேலும் சாமானிய நாடுகளும் இல்லை. இதோ யார் யார் இருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை பாருங்கள்.
| நோட்ட உறுப்பு நாடுகளின் பட்டியல் (இணைந்த ஆண்டுடன்) | ||
| நாடு | இணைந்த ஆண்டு | |
| அமெரிக்க ஐக்கிய நாடுகள் | 1949 | |
| பெல்ஜியம் | 1949 | |
| கனடா | 1949 | |
| டென்மார்க் | 1949 | |
| பிரான்ஸ் | 1949 | |
| ஐஸ்லாந்து | 1949 | |
| இத்தாலி | 1949 | |
| லக்ஸம்போர்க் | 1949 | |
| நெதர்லாந்து | 1949 | |
| நார்வே | 1949 | |
| போர்ச்சுகல் | 1949 | |
| இங்கிலாந்து | 1949 | |
| கிரீஸ் | 1952 | |
| துருக்கி | 1952 | |
| ஜெர்மனி | 1955 | |
| ஸ்பெயின் | 1982 | |
| செக் குடியரசு | 1999 | |
| ஹங்கேரி | 1999 | |
| போலந்து | 1999 | |
| பல்கேரியா | 2004 | |
| எஸ்டோனியா | 2004 | |
| லாட்வியா | 2004 | |
| லித்துவானியா | 2004 | |
| ரோமானியா | 2004 | |
| ஸ்லோவாக்கியா | 2004 | |
| ஸ்லோவேனியா | 2004 | |
| அல்போனியா | 2009 | |
| க்ரோஸியா | 2009 | |
| மான்டென்க்ரோ | 2017 | |
| வடக்கு மேஸ்டோனியா | 2020 | |
| பின்லாந்து | 2023 | |
| ஸ்வீடன் | 2024 | |
கராச்சியில் தாக்கியிருந்தால்
துருக்கி ஒரு நேட்டோ நாடாகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போது, துருக்கி கடற்படை கப்பல் கராச்சி துறைமுகத்தில் வருகைதந்தது. எதிர்பாராத சூழலில், இந்தியா துருக்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தினால், அது நேரடியாக நேட்டோ நாடை தாக்கியதாக கருதப்படும்.
சாத்தியமான விளைவுகள்:
- நேட்டோ நாடுகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது
- இது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கிறது
- பிராந்திய பதற்றம் சர்வதேச அளவில் விரிவடையும் சாத்தியம்
துருக்கி தந்திரம்
துருக்கி தூதுவர் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப்பை சந்தித்து, பாகிஸ்தானுடன் ஓரணியில் இருப்பதாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது துருக்கியின் வெளிப்படையான நிலைப்பாட்டை காட்டுகிறது. முன்பு நம்முடம் நட்பாக இருந்த துருக்கி, முழு இஸ்லாமிய கொள்கைகளை தழுவும் நாடாக மாறத் தொடங்கியதும் பாகிஸ்தான் பக்கம் சரிந்துவிட்டது. அதை அம்பலப்படுத்தியதுதான், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

விமானப்படை சர்ச்சை
இந்தியா தனது பதிலடியை தொடங்கிய நேரத்தில், துருக்கி விமானப்படை C-130 கராச்சியில் தரைநிறுத்தம் செய்தது, இது ஆயுதங்கள் சப்ளை செய்வதற்காக என்று பரபரப்பை கிளப்பினாலும், துருக்கி அரசு அதை மறுத்தது. துருக்கி அரசு "எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே" என்று சமாளித்தது.
நேட்டோ விதிமுறைகள்
நேட்டோ Article 5 இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது - 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு. அமெரிக்கா மீதான தாக்குதலை நேட்டோ நாடுகள் தங்கள் மீதான தாக்குதலாக முடிவு செய்து அட்டாக்கை ஆரம்பித்தன. கடல் பகுதியில் உள்ள நேட்டோ நாட்டின் கப்பல் மீதான தாக்குதலும் இந்த விதிமுறையின் கீழ் வரும். எனவே இந்தியாவை நேட்டோ நாடுகள் எதிர்த்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. எதிர்க்காமல் நாம் ராஜதந்திர நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் துருக்கியின் நோக்கம் மோசமானது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications