அடேங்கப்பா.. ஆண்டிப்பட்டிக்குப் போற கடைசி பஸ்ல கூட இம்புட்டு கூட்டம் இருக்காது!
சென்னை: வட இந்திய மீடியாக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.. டிபேட் என்றாலும் சரி, வேறு மேட்டர் என்றாலும் சரி கலக்கி விடுகிறார்கள். அதிலும் அர்னாப் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் சவுண்டு ஜவ்வைக் கிழித்தெடுக்கும்.
நேற்று எக்ஸிட் போல் திருவிழாவை திறம்பட நடத்தி முடித்தன வட இந்திய ஊடகங்கள். அதில் ரிபப்ளிக் டிவியும் ஒன்று. அர்னாப்தான் நடு நாயகமாக இருந்து கலக்கினார். ஸ்கிரீனைப் பார்த்தால்.. அடேங்கப்பா.. ஆண்டிப்பட்டிக்குப் போற கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்த கூட்டம் போல அப்படி ஒரு ஜனக் கூட்டம்..!

அத்தனை பேரும் டிபேட்டில் பங்கேற்க வந்த கருத்துக் கோர்வையாளர்கள் (வார்த்தை சரிதானே!). அதாவது எக்ஸிட் போல் குறித்து தங்களது கருத்துக்களைக் கொட்டி வைக்க வந்த அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள்.. பல் துறையினர்.
Regular channels: Let’s discuss #ExitPoll2019. #RepublicExitPoll: Let’s invite all the respondents 😉 pic.twitter.com/w5TlcIA8Wm
— Anuraag Saxena (@anuraag_saxena) May 20, 2019
ஒரு ஐந்து பேரைக் கூப்பிடுவார்கள், அல்லது 6, 7 பேரை கூப்பிடுவார்கள். ஆனால் இந்த ரிபப்ளிக் டிவி டிபேட்டுக்கு வந்தவங்க எத்தனை பேர் தெரியுமா 18 பேராம். நீநீநீநீநீநீநீநீளமா ஒரு பெஞ்ச்சைப் போட்டு அத்தனை பேரையும் உட்கார வைத்திருந்தனர். பார்க்கவே செம ஜாலியாக இருந்தது.
டிபேட் நடத்துவதிலும் பிரமாண்டம் காட்ட நினைத்த ரிபப்ளிக் டிவியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அதுக்காக இப்படியா.. 2 பேர், 3 பேர் கூட்டமா பேசினாலே ஸ்கிரீன் கிழியும்.. இதில் 18 பேரும் சேர்ந்து கருத்தை வீசினால்.. அடேயப்பா.. இப்படியாக 18 பேரும் சிறப்பாக டிபேட்டை முடித்துக் கொண்டு அவரவர் இல்லம் திரும்பினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications