இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்!
சென்னை: 2 நாட்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ நாராயணனுக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது 2 நாட்களிலே அவர் நாங்குநேரி தொகுதிக்காக தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமமுகவுக்கு நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குள, பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான ரெட்டியார்ட்டி நாராயணன் அதிருப்தி அடைந்தார். நாங்குநேரி தொகுதியில் மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்று நாராயணன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அமமுகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், கடுமையான அப்செட்டில் இருந்தார்.
இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால் நாராயணன் தவெகவில் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. ஏனென்றால் 2 நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்தால் சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தவெக வேட்பாளர்கள் அறிமுக விழாவில் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளராக நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருப்பத்தூர் தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து விலகிய திருப்பதி என்பவரும் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கும் திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்யாறு தொகுதியில் வேட்பாளராகவும் அதிமுகவில் இருந்து விலகிய தூசி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்படி அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்கள் ஏராளமானோருக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்களுக்கு செங்கோட்டையன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. அதேபோல் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின், தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: ”பெரம்பூர், திருச்சி கிழக்கு” 2 தொகுதிகளில் விஜய் போட்டி -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்!











Click it and Unblock the Notifications