டிரோனில் ஜனநாயகன் ஷூட்டிங்? கப்பலை விட்டு தரைக்கு வந்த புஸ்ஸி ஆனந்த்! தட்டி தூக்க தனிப்படை தயார்?
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கப்பலில் இருந்து தரை பகுதிக்கு வந்துவிட்டாராம். அவர் எங்கே இருக்கிறார் என்பது போலீஸுக்கு தெரிந்திருந்தும் சில ஆதாரங்களை சேகரித்து வருவதால் அவரை விட்டு பிடித்து பிறகு தட்டி தூக்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இதில் ஏ1 குற்றவாளியாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், ஏ2 குற்றவாளியாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஏ3 குற்றவாளியாக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூவரில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டுவிட்டார். புஸ்ஸி ஆனந்தும் நிர்மலா குமாரும் எங்கிருக்கிறார்கள் என தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். புஸ்ஸி ஆனந்தைத்தான் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறதாம். புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் ஏற்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து போலீஸார் அங்கு தேடினர். இதையடுத்து அவர் புதுவையில் ஒரு அரசு பங்களாவில் தங்கியிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் பீகாரில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் கப்பலில் நடுக்கடலில் சுற்றி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விண்ணப்பித்துள்ளார். இதன் மீது விசாரணை எப்போது நடக்கும் என தெரியவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு நெருக்கமான கடப்பா தொழிலதிபரிடம் தஞ்சம் அடைந்து அவரின் பாதுகாப்பில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் போலீஸுக்கு தெரியும். ஆனாலும் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதால் அந்த மனு மீது அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அடுத்த நிமிடமே அவரை கைது செய்துவிடுவது என்ற யோசனையில் பெங்களூரில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனராம்.
அவ்வாறு புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டால் அவரை காவலில் எடுத்து பல்வேறு விஷயங்களை விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு பட்டியலிட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்து வரும் "ஜனநாயகன்" படத்தில் புஸ்ஸி ஆனந்தும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் கரூர் வந்த கூட்டத்திற்கும் ஜனநாயகன் படத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகன் படப்பிடிப்பு கரூர் கூட்டத்தில் நடத்தப்பட்டது என சொல்லப்படும் நிலையில் அங்கு சுற்றி சுற்றி வந்த டிரோன் கேமராவில்தான் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. எனவே விஜய் ஏன் தாமதமாக கரூருக்கு வந்தார், டிசம்பரில் பிளான் செய்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் வந்தது ஏன் உள்ளிட்டவை குறித்து அவரிடம் விசாரிக்க போகிறார்களாம்.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications