ஒரே நாளில் பனையூரில் நடந்த 2 மீட்டிங்.. திமுகவை அட்டாக் செய்ய அடுத்தக்கட்ட திட்டம்.. தயாரான விஜய்!
சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து இருக்கிறார். பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பரந்தூர் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்றும் விஜய் உறுதி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களாக தவெக சார்பாக நடந்து வரும் கல்வி விருது நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று பரிசுகளை அளித்து வருகிறார். இதன் 4ஆம் கட்ட விழா நாளை மீண்டும் நடக்கவுள்ளது.

பனையூரில் நடந்த சந்திப்பு
39 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி விருது அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாள் விழாவில் அடுத்தக் கட்ட அரசியல் அறிவிப்புகள் குறித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழு மற்றும் விவசாயிகளை விஜய் சந்தித்துள்ளார்.
ஜனவரியில் விஜய் செய்த சம்பவம்
விஜய் தனது முதல் கள அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்துதான் தொடங்கினார். ஜனவரி மாதம் பரந்தூர் சென்ற விஜய், அங்குள்ள விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வகையிலும் ஆதரவாக நிற்கும் என்றும் அறிவித்தார்.
விஜயை சந்தித்த விவசாயிகள்
இந்த நிலையில் தவெக அலுவலகத்தில் பரந்தூர் போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் தவெக அலுவலகத்திற்கு வந்து விஜயை சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த விஜய், பின்னர் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது விஜய்-க்கு போராட்டக் குழு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்த திட்டம்
இதன்பின் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தவெக துணை நிற்கும் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜாக்டோ ஜியோ அமைப்புச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு விஜயை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் அடுத்தடுத்து திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தவெக ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்!












Click it and Unblock the Notifications