லாக்-அப் மரணம்.. நியாயமும் தீர்ப்பும் வாங்கித் தருவது என் கடமை.. விஜய் செய்து கொடுத்த சத்தியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கி கொடுக்க வேண்டியது எனது கடமை என்று காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி நீதி கிடைக்க தவெக முயற்சிக்கும் என்றும் விஜய் உறுதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவலர்களின் கொடூரமான தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் மரணத்தை கண்டித்து பல்வேறு கட்சிகளும் கண்டன குரல்களை எழுப்பினர்.

TVK Leader Vijay Vows Legal Fight for Justice in Police Custodial Death Case

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் அஜித் குமார் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதலை கூறினார். அதேபோல் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். அஜித் குமார் குடும்பத்தினரை சந்திக்க விஜய் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் நாளை சென்னையில் அஜித் குமார் மரணத்தை கண்டித்து தவெக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் லாக் அப்பில் மரணமடைந்த 18 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கோரிக்கை மனுவை எழுதி பெற்றுக் கொண்ட விஜய், நாளை நடக்க உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக சார்பாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கி கொடுக்க வேண்டிய எனது கடமை. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி நீதி கிடைக்க தமிழக வெற்றிக் கழகம் முயற்சிக்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். நாளை சென்னையில் நடக்கும் போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ள உள்ளார். அரசியலுக்கு வந்தபின் விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+