சும்மா விடக்கூடாது! அஜித் குமார் வீட்டிற்கு போய் வந்தவுடன்.. விஜய் போட்ட ஆர்டர்.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பிற்கு பின், கட்சி நிர்வாகிகளிடம் விஜய் சில முக்கிய விஷயங்களைப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் மரண வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் டார்ச்சர் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் அவரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், அஜித் குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
விஜய்யின் சரியான முடிவு
அஜித் குமாரின் மரணத்தில் ஒரு நல்ல அரசியல் கட்சியாகவும், மக்களின் பக்கம் நிற்கும் கட்சியாகவும் தமிழக வெற்றிக் கழகம் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. மரணத்தில் அரசியல் செய்வது தவறான அணுகுமுறையாக இருந்தாலும், காவல்துறையினரே சம்பந்தப்பட்ட ஒரு கொலையில், அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதும், மக்கள் பக்கம் நின்று நீதிக்காகப் போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை. நடிகர் விஜய் அதைச் சரியாகச் செய்துள்ளார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும், கேள்விகளும், நேரடியான அழுத்தங்களுமே ஒரு ஜனநாயகம் சரியாக இயங்குவதற்கான சான்றுகள். ஆளும் கட்சி எவ்வளவு நல்ல கட்சியாக இருந்தாலும், அவர்களைக் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் எப்போதும் தேவை. அந்த வகையில், நடிகர் விஜய் தனக்கான ஒரு எதிர்கட்சி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
போராட்டத்திற்கு விஜய் உத்தரவு
ஜூலை 6-ம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு விஜய் நேற்று இரவே சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேரையாவது திரட்ட வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யின் தலையீடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதலாகவும், நீதிக்கான போராட்டத்திற்கு உந்துதலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications